HTC நிறுவனம் தன் மொபைல் போன்களிலேயே மிக அதிக விலை மதிப்புமிக்க போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை இந்திய ரூபாயின் மதிப்புபடி ரூ. 61,490.
இருப்பதிலேயே மிகப்பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதில் உள்ளது, இதுவரை 4.7 அங்குல அகலத் திரையினையே HTC தந்துவந்தது.
இதன் பின்புற கமெராவின் கீழாக ஸ்கேனர் ஒன்று தரப்பட்டுள்ளது, விரல் ரேகையினை இது உணர்ந்து, இந்த போனின் உரிமையாளர் மட்டுமே பயன்படுத்த வழிவகை செய்கிறது.
இதன் இரு மொடல்கள் 16 மற்றும் 32 ஜிபி மெமரியுடன் உள்ளன. இந்த போனைப் பயன்படுத்துபவர்கள், கூகுள் ட்ரைவில் 50 ஜிபி மெமரி இடத்தினை இலவசமாகப் பெறலாம்.
இதில் இணைத்து தரப்படும் பற்றரி 3,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. வழக்கமாக, 4 அங்குல திரை கொண்ட போன்களில், 1,800 முதல் 2,000 mAh திறன் கொண்ட பற்றரிகள் இணைக்கப்படும்.
இதன் திரை 5.9 அங்குல அகலத்தில் அமைக்கப்படுவதால், கூடுதல் திறனுடன் கூடிய பற்றரி தரப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.