அப்பிள் நிறுவனத்தின் பெரிய தொடுதிரை கொண்ட சாதனங்கள்
கைபேசி மற்றும் கணனிச் சாதன உற்பத்தியில் மக்கள் மத்தியில் நீங்கா அப்பிள் நிறுவனமானது தற்போது பெரிய தொடுதிரைகளைக் கொண்ட சாதனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி 12 அங்குல தொடுதிரை கொண்ட iPad இனை 2014ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், பெரிய தொடுதிரை கொண்ட iPhone இனை மே மாதத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த அறிமுகங்களைத் தொடர்ந்து 11.1 அங்குல அளவுடைய Macbook Air சாதன உற்பத்தியை நிறுத்தி அதற்கு பதிலாக iPad சாதனத்தை பயன்படுத்த பயனர்களுக்கு அறிவுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.