இன்றைய சூழலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்துள்ளது பேஸ்புக்.
ஆனால் தனிப்பட்ட முறையில் இருவர் இன்று மெசேஜ் செய்ய பயன்படுத்துவது வாட்ஸ் ஆப்(WhatsApp) தான், இன்று அதிகமான இளைஞர்களும் இதைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக டுவிட்டரை வீழ்த்தி படுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று ட்விட்டர் அக்கவுன்ட் கூட இல்லாமல் பலரை நாம்
பார்க்கலாம், ஆனால் வாட்ஸ் ஆப் இல்லாமல் நிச்சயம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரை பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு பிரபல்யமடைந்துள்ளது.
விரைவில் இது பேஸ்புக்கை வீழ்த்தினாலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
|